பிரதமர் வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பு.

மே மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற பல்வேறு வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

கல்வி அமைச்சின் ஆலோசனை மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள உள்நாட்டலுவல்கள் பிரிவின் அனுசரணையுடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிட்டி எஃப்எம் சேவையால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் பக்தி பாடல்கள் புதசர நிகழ்ச்சி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் மே 14 ஆந் திகதி கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. கொழும்பில் உள்ள 12 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பக்திப் பாடல்களை பாடினர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி உதித கயாஷான் குணசேகர, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹந்த சில்வா, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிள்ளைகள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மே மாதம் 13 ஆம் திகதி முதல் நடைபெறும் "புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன்" இணைந்து ஜனாதிபதி செயலக வளாகத்தில் வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மே 14 ஆம் திகதி அங்கு நடைபெற்ற பக்தி பாடல் நிகழ்ச்சியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

பிரதமர் ஊடகப் பிரிவு