தேசிய மக்கள் சக்தியின் வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) விரைவில் இரத்துச் செய்யப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்:
மன்னார் முசலி தேர்தல் தொகுதியில் சிலாவத்துறை பகுதியில் ஏப்ரல் 12 ஆம் திகதி இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவது தொடர்பில் அமைச்சரவை ஏற்கனவே ஒரு குழுவை நியமித்துள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மக்கள் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாக இடமளிக்கப்படமாட்டாது என்றும், ஒரு அரசாங்கம் என்ற வகையில், நெருக்கடிகளை ஒருபோதும் இனவாத மனப்பான்மையுடன் பார்க்கப்பட மாட்டாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு